இத்தனை பெரிய காம்பெளக்ஸை ஏலத்தில் எடுத்திருக்கும் பிரபல ஜப்பானிய வர்த்தக நிறுவனமான சுமிடோமொவிற்கு அவ்விடத்தில் கமர்சியல் ஆஃபீஸ் காம்ப்ளெக்ஸ் கட்டுவதே பிரதான நோக்கமாம். முன்னதாக இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தனது வர்த்தக நிறுவனங்களை ஒருங்கிணைத்து இந்தக் கட்டிடத்துக்குள் கொண்டு வரும் திட்டமும் அவர்களுக்கு உண்டு. அத்துடன் இந்நுறுவனத்துக்கு இந்தியாவில் தொழில் செய்ய விரும்பும் பிற பன்னாட்டு நிறுவனங்களுக்கான அலுவலக யுனிட்டுகளை வாடகைக்கு விட்டு பெரும்பணம் சம்பாதிக்கும் வாடகை அலுவலகப் பூங்காக்களை உருவாக்கும் திட்டமும் இருக்கிறது. ஏனெனில், உலகளாவிய முதலீட்டாளர்களான பிளாக்ஸ்டோன், ப்ரூக்ஃபீல்டு, GIC ஆஃப் சிங்கப்பூர், கத்தார் இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தரும் அலுவலகப் பூங்காக்களின் (டெக்னோ பார்க், டைடல் பார்க் இத்யாதி வகையறாக்கள்) மீது பெரும்பணத்தை கொட்டத் தயாராக இருப்பதால் அந்நிறுவனங்களின் சேவைக்குத் தேவையான அலுவலகக் கட்டடங்களை வாடகைக்கு விடும் திட்டத்தில் இருக்கிறது ஜப்பானிய நிறுவனம். அதன் மூலமாக இந்திய பொருளாதாரச் சேவைகளின் ஊடாகத் தனது பயணத்தை தொடங்கவிருக்கிறது சுமிடொமொ என்கிறார்கள்.