நூற்றுக்கணக்கான மக்கள் ஹெளரா பாலத்திலும், ஆற்றின் கரையிலும், போட்களிலும் நின்று கொண்டு இவரது மாயாஜாலத்தை ரசிக்கக் கூடி இருந்த நிலையில், ஆற்றில் இறக்கப்பட்ட மந்திரவாதி சஞ்சல் லாஹிரி அவர்கள் கண்ணெதிரே தன்னை ஆற்றுக்குள் இறக்கப் பயன்படுத்தப்பட்ட ஆளுயர இரும்புக் கூண்டின் பலவீனமான கதவை உடைத்துத் திறந்து கொண்டு ஹாயாக வெளியேறிய காட்சி அரங்கேறியது. அதாவது மாயாஜாலம் என்ற பெயரில் காணாமல் போய் மீள்வதற்கு பதில், அவர் கண்ணெதிரே கூண்டை உடைத்து தப்பி நீந்தி வருவதைக் கண்ட மக்கள், தங்களுக்கான த்ரில் அனுபவம் மிஸ் ஆகி விட்டதே என்று கோபமாகி விட்டனர். கண்ணெதிரே காணாமல் போய் மீண்டு வருவேன் என்று சொன்ன மந்திரவாதி, இப்படி கண்ணெதிரே காட்சியாக நீந்தி வருவதைக் கண்டதும், இது ஒரு ஏமாற்றுவேலை என்று அவர்களுக்குப் புரிந்து விட்டது. அதனால் கோபத்தில் கொந்தளித்து ’எங்களை என்ன வேலையற்ற மடையர்கள் என்றா நினைத்து விட்டாய்? ஆற்றுக்குள் காணாமல் போவதாகச் சொல்லி விட்டு நீந்தி வந்தா தரிசனம் தருகிறாய் என்று சொல்லி, மந்திரவாதியை நையப்புடைத்து அனுப்பி விட்டனர். இது அன்று நடந்த கதை.