சென்னை, புழல் அருகே உள்ள இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் வசித்துவரும் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் உமாசங்கர் (32 வயது), ரோஷன் (34 வயது) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2019, ஜூலை 22 அன்று உமாசங்கர் மற்றும் ரோஷன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது அஜித் ரசிகரான உமாசங்கர் விஜய் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால், உமாசங்கர் மற்றும் ரோஷன் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் கோபமடைந்த ரோஷன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்துவந்து உமாசங்கர் தலை, கழுத்து மற்றும் நெஞ்சில் சரமாரியாக வெட்டியுள்ளார்.