பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஏன் நிற்கிறேன் என்றால், இது நான் பிறந்து வளர்ந்து ஆளான இடம். தமிழ்நாட்டுக்கு வரும் முன் எனது நடிப்பு பட்டை தீட்டப்பட்டது இங்கே தான். என் பள்ளி, கல்லூரி காலங்களும் இங்கே தான் கடந்தன. இது ஒரு மினி இந்தியா போன்ற பகுதி. இங்கே கன்னடர், தமிழ், தெலுங்கர், மலையாளி, இந்தி பேசக்கூடியவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் கலந்து வசிக்கிறார்கள். என்னை அவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அதனால் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். இதில் வெற்றி, தோல்வி பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும் என்பது தான் எனது ஒரே குறிக்கோள். வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் நான் யோசிக்கவில்லை. மக்கள் யோசிப்பார்கள். அவர்கள் தான் இங்கே உண்மையான ஹீரோக்களே தவிர நீங்கள் நினைப்பது போல மோடி அல்ல.