தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் குறித்த கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது. மேலும், உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை பொதுப்பணித்துறையின் கீழ் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 39,202 ஏரிகள் உள்ளன. இதில் 14,098 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஏரிகளில் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் கரைகள் பலவீனமடைந்தும், மதகுகள் பழுதடைந்தும், நீர்பிடிப்பு பகுதிகள் தூர்ந்து கொள்ளளவை இழந்தும் காணப்படுகிறது.
இந்த ஏரிகளை பல்வேறு திட்டங்களின் கீழ் புனரமைக்கும் பணி பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது தான் ரூ.1,250 கோடி செலவில் 21,250 சிறுபாசன ஏரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதற்கான பணிகளை ஊரக வளர்ச்சித்துறை தொடங்கியுள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் புனரமைப்பு பணி நடைபெறாத ஏரிகளை கணக்கெடுக்கும் பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக அந்த ஏரிகளின் புனரமைப்பு பணிக்காக நிதியை பெறவும் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்ட ஏரிகள் மட்டுமே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கவும், பாசன வசதிக்காக கூடுதல் நீரை சேமித்து வைக்கவும் அனைத்து ஏரிகளும் புனரமைக்கப்படுகிறது. வரும் ஆண்டில் 5 ஆயிரம் ஏரிகளை பொதுப்பணித்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த ஏரிகளில் புனரமைப்பு பணி மேற்கொள்ள உள்ளது.
தற்போது அதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இருந்து விரைவில் அறிக்கை பெறப்பட்டு மத்திய அரசிடம் நிதி கேட்டு அனுப்பி வைக்கப்படும்’
ஒரே ஏரியை கணக்கு காட்டி மோசடி
தமிழகத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் முதல் பாகத்தில் 4 ஆயிரம் ஏரிகள் புனரமைக்கப்பட்டன. தற்போது இரண்டாவது பாகத்தில் ஏற்கனவே புனரமைப்பு பணி மேற்கொண்ட 1,200 ஏரிகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்று ஒரே ஏரியை தொடர்ந்து புனரமைத்து பல கோடியை வீணடித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. புனரமைப்புப் பணிகள் காகித அளவில் உள்ளதாகவும், வழித்தடங்கள் முழுதும் ஆக்கிரமிப்பு, சாக்கடைகளாக மாறிப்போனதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனாலேயே மத்திய அரசு நிதி தர மறுப்பதாகவும் தமிழக பொதுப்பணித்துறை மீது புகார் எழுந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆறுகள், முக்கிய கடற்கரைகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள், சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து சூழலியலை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். வருவாய்த் துறையினர் இதுவரை அந்த ஏரியை சர்வே செய்து கொடுக்காததே இதற்கு காரணம் என சொல்வது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே ஒழிய வேறில்லை. மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு தீவிரம் காட்டிவிட்டு வறட்சி காலத்தில் தூற்கும் அதிகாரிகளை என்ன தான் செய்வதோ கவனம் செலுத்தினால், மழை நீரை சேமிக்க முடியும். இதன் மூலம் நிலத்தடி நீர் உயரும்; குடிநீர் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தொடர்வது அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: காங்கிரஸ்

மாஸ்க் கொண்டாட்டம் பற்றி பேசிய சுழல்பந்து இரட்டையர்கள் அகீல் ஹொசைன், நூர் அகமது!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


