ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறதா? நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்!

2008ம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத அளவுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2019, 11:13 am

2008ம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத அளவுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது.

மத்திய நிலத்தடி நீர் ஆதார வாரியத்தின் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கும் தகவல் என்னவென்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 85% குறைந்துவிட்டது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். நகரமயமாதல், பொய்யாகிப் போன பருவ மழை, நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுதல் போன்றவையே இதற்குக் காரணம்.

அதாவது 2008ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பு, மே மாதத்துக்குப் பின்பு என பருவ மழைக்கு முன்னும், பின்னும் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்டத்தின் அளவோடு தற்போது ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்ட அளவு 85% குறைந்துள்ளது.

நகரமயமாதல் அதிகரிக்கும் போது நிலப்பரப்பு குறைகிறது. இதனால் மழை பெய்தாலும் கூட நிலத்தடி நீர் பூமிக்குள் இறங்குவதற்கான வாய்ப்புக் குறைந்து போகிறது.

மத்திய சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 2-4 மீட்டர் அளவுக்குக் குறைந்துள்ளது.

கடந்த பருவ மழை காலத்துக்குப் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் காட்டான்குளத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே நிலத்தடி நீர் 71% அளவுக்கு உயர்ந்தது. இதைத் தவிர திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தே உள்ளது.

பொதுவாக பருவ மழைக் காலத்துக்குப் பிறகு நிலத்தடி நீர்மட்டமானது 100% ஆக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அதுவும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே 71% ஆக உயர்ந்தது. 2017ம் ஆண்டு கடும் வறட்சி காலத்தில் கூட நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு 91% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.