சர்வதேச அளவில் இந்தியாவுக்கான அடையாளமென்பது ‘வேற்றுமையில் ஒற்றுமை கொண்டாடும் நாடு’‘ என்பதாகவே இன்று வரையிலும் நிலைத்திருக்கிறது. தனது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கொள்கையை எச்சூழலிலும் கைவிடாதிருக்கவும், தேச விடுதலைக்குப் பின் தனக்குத்தானே வடிவமைத்துக் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பு கெடாது இருக்கவும், மக்களிடையே ஒற்றுமை நிலவச் செய்யவும், நீண்ட நெடிய பாரம்பர்யம் கொண்ட இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இலக்கியப் படைப்புகளை களையெடுக்கவும் எளிமையாகச் சொல்வதென்றால் சர்ச்சைக்குரிய இலக்கியப் படைப்புகள் அவை... நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், தன் வரலாறு, அனுபவப் பகிர்வுகள் என எந்த வடிவத்தில் இருந்தாலும் அவற்றிற்கு முற்றிலுமாகத் தடைவிதித்து இந்தியாவுக்குள் அவற்றைப் புழங்கவொட்டாமல் அழித்தொழிக்கும் கடுமையான நடவடிக்கையை இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.