இன்னொரு அம்மா, வகுப்பாசிரியையிடம் தொலைபேசியில் அழுது கொண்டே பகிர்ந்து கொண்ட விஷயம், மேம், எம்பொண்ணு இப்ப 9 வது தான் படிக்கிறா, ஆனா, சுத்தமா என்னை மதிக்கிறதே இல்லை. எதுக்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசறா. அடிக்க கை ஓங்கினா, பதிலுக்கு அவளும் கை ஓங்கறா. நாங்கல்லாம் இப்படியா இருந்தோம். இப்படியெல்லாம் செய்திருந்தோம்னா, எங்க பேரண்ட்ஸ் எங்களை கொன்னே போட்ருப்பாங்க. வீட்ல வச்சு வளர்த்திருக்கவே மாட்டாங்க, கொஞ்சம் புத்தி சொல்லுங்க மேம். அவளுக்கு பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்கச் சொல்லி கத்துக் கொடுங்க ப்ளீஸ்... தினமும் அவளால என் நிம்மதியே போச்சு, எனக்கும், என் ஹஸ்பண்டுக்கும் இடையில் சண்டை வரதுக்கு காரணமே என் மகளாத்தான் இருக்கறா! என்ன செய்யறது, இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கறதுன்னே எனக்குப் புரியல’