இயல்பான மனநிலை கொண்ட அத்தனை மனிதர்களுக்குமே ‘உதவி’ என்ற வார்த்தை மிகப் பிடித்தமானதாகவே இருக்கிறது. எளியவர்களுக்கும், வறியவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற மனநிலை எல்லோருக்குமே உண்டு. மனிதர்களின் உதவும் நோக்கில், எங்கே இடைஞ்சல் வருகிறது என்றால்? நேர விரயம், பொருள் விரயம், உதவப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வோமோ என்ற சஞ்சலம், சந்தேகம் இதுமாதிரியான காரணங்களை உத்தேசித்துக் கொண்டு தான் பலரும் தங்களது உதவி மனப்பான்மைக்கு கடிவாளம் போட்டு அடக்கி விடுகிறார்கள். அந்த விஷயத்தில் தான் கெளதம் போன்ற அசலான மனிதர்கள் நம்மிடையே இருந்து வேறுபடுகிறார்கள்.