ஆனால், இப்போதிருக்கும் அதிகாரிகளின் பொறுப்புக்கு கோயில் நிர்வாகம் சென்றதிலிருந்து அவர்களில் ஒருவர் கூட கோயிலுக்கான ஆகம விதிகளையோ அல்லது ஒழுங்குமுறை விதிகளையோ பின்பற்றுவதே இல்லை. அவர்களை அனைவரும் அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள், சினிமாக்காரர்கள், அதிகார பலம் கொண்டவர்கள் போன்றோரின் அடிமைகளாகி விட்டார்கள்இல்லையெனில் அரசியல்வாதிகள் தரிசனம் செய்ய வேண்டுமென்பதற்காக ஏழுமலையானின் பிரசாத நேரத்தை யாராவது துரிதப்படுத்துவார்களா என்ன? சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீளும் பிரசாத நேரத்தை சில நிமிடங்களில் சுருங்க முடித்தால் என்ன? என்று கேட்கிறார்கள் இந்த ஐஏஎஸ் அதிகாரிகள். யாருக்காக என்றால்? பணம் படைத்தவர்களின் வசதிக்காக. இப்படிப்பட்டவர்கள் ஏழுமலையானின் பொக்கிஷங்களை சூறையாடுவதில் துணை போயிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்!. நிச்சயம் ஏழுமலையானின் நகைகள் திருடப்பட்டிருக்கின்றன. ஏனெனில் ,