கடந்த 2016 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது குடிகாரக் கணவனின் சித்ரவதை பொறுக்க முடியாமல், கணவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனது கண்களை இதே விதமான பசையால் ஒட்டியதாக வழக்கொன்று பதியப்பட்டுள்ளது. எனவே மது, மாது, லாஹிரி வஸ்துக்களின் மீதான போதை காரணமாக அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடிய தம்பதிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. முன்பே சுட்டிக் காட்டியவாறு மனித மனம் விசித்திரமானது. அதைவிட போதைக்கு ஆட்பட்ட மனித மனம் சைக்கோத்தனத்தின் உச்சத்திற்குச் செல்லவும் தயங்காது என்பதற்கு நம்மிடையே பலவிதமான திரைப்பட மற்றும் செய்தி அடிப்படையிலான உதாரண சம்பவங்கள் உள்ளன.