வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே பேராசிரியர் பாரதநந்த சாட்டர்ஜியை திருமணம் செய்து கொண்டார். இவரும் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, ஹவுராவில் உள்ள பெங்கால் பொறியியல் கல்லூரியில் புவியியல் மற்றும் உலோகத் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ஜூலி எனப் பெயர் சூட்டினர். தனது கணவனின் துணையின்றி தன்னால் வாழ்வில் இவ்வளவு உயரங்களை எட்டியிருக்க முடியாது என்று அசீமாவே கூறியுள்ளார். அதே சமயம் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஒரு நல்ல மனைவியாக, தாயாக, மருமகளாக, சகோதரியாகத் தனது பணிகளைச் சரியாக செய்வார். காலையில் எழுந்து சமையல் உட்பட வீட்டில் உள்ள முக்கிய வேலைகளை செய்துவிட்டுதான் கல்லூரிக்குச் செல்வராம், அதே போல் இரவு தாமதமாக வந்தாலும் ஓய்வின்றி மீண்டும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவாராம்.