தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, தமிழக நீர்வளத்துறை மற்றும் நீர் ஆதாரத் தரவு மையங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால் மொத்தத் தமிழகத்திலுமே நிலத்தடி நீர் மட்டம் என்பது அதல பாதாளத்திற்குச் சென்றிருந்தது. இந்த ஆண்டும், கடந்த ஆண்டுகளைப் போல மழை நீர் வீணாக்கப் பட்டாலோ, அல்லது பருவ மழை பொய்த்துப் போனாலோ தமிழக மக்கள் மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை சந்தித்தாக வேண்டிய கடுமையான சூழல் நிலவி வந்தது. ஆனால் தற்போது, சமீபத்தில் தமிழக மாவட்டங்கள் சிலவற்றில் பெய்துள்ள தொடர்மழையின் காரணமாகச் சில மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உயர்ந்து வருவதாக நீர் ஆதாரத் தரவு மையங்கள் அறிவித்துள்ளன.