வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணிகளின் விருப்பத்துக்கேற்ற வகையில் டோமினோஸ் பீட்ஸா, கே.எஃப்.சி சிக்கன், பர்கர், உள்ளிட்ட ஃபாஸ்ட் ஃபுட் வகையறாக்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது இந்திய ரயில்வே. முன்னதாக டோமினோஸ், கே.எஃப்.சி, சாகர் ரத்னா, மெக்டொனால்டு உள்ளிட்ட மல்ட்டி கஸின் ஃபாச்ட் ஃபுட் உணவு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ள இந்தியன் ரயில்வே அதற்கொரு முன்னோட்டமாக மேற்கண்ட அதி விரைவு சொகுசு ரயில்களில் அந்த வசதிகளை வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்திப் பார்க்கவிருக்கிறதாம். இனி ரயில் பயணிகளுக்கு ஒரே ஜாலி தான். போரடிக்கும் ஸ்டீரியோ டைப் ரயில்வே உணவு வகைகளிடமிருந்து அவர்களுக்கு இனி விடுதலை. தாங்கள் விரும்பும் சிக்கன், மட்டன், பீட்ஸா, பர்க்கர் வகைகளை இனி ரயில் பயணத்தின் போதும் ஒரு கை பார்ப்பார்கள்.