இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில், பல நேரங்களில் குற்றவாளிகள் அதிகமும் அடையாளம் காணப்படுவதில்லை எனும் குறை இருந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே, பாதிப்படைந்த குழந்தைகளுக்கு, தங்களுக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றிச் சொல்லத் தெரிந்திராத குழந்தமை தான். பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப் பட்ட இளம்பெண்களே நீதிமன்றங்களிலும், மருத்துவமனைகளிலும் கேட்கப் படும் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் அளிக்க தகுந்த வார்த்தைகள் கிடைக்காது தடுமாறி மனம் வெறுத்துப் போகையில் மனித உடலின் அந்தரங்கம் அறியாப் பூந்தளிர்களுக்கு மட்டும் எப்படித் தெரியும் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிக்க?!