ஆச்சரியம் என்னவென்றால் கோடி கணக்கான மக்களைத் தன்வசப்படுத்தி உள்ள இது சிறியவர்களை விடப் பெரியவர்களையே அதிகம் கவர்ந்துள்ளது. நம்மில் பலர் பதட்டமாக இருக்கும் பொழுதோ, யோசிக்கும் பொழுதோ, எதையாவது கூர்ந்து கவனிக்கும் பொழுதோ பேனாவின் மூடியைத் திறந்து திறந்து மூடுவது, காலை ஆட்டுவது, விரல்களில் நட்டு உடைப்பது போன்ற பல விஷயங்களை மேற்கொள்வோம். அதைப் போன்றதே இந்தக் கருவியை நமது விரல்களுக்கு இடையில் வைத்துச் சுழற்றுவதும். இது ஒரு விஷயத்தில் நம்மை நன்கு கவனம் செலுத்த அனுமதிப்பதோடு, நிதானமாக எதையும் யோசிக்கவும் ஒரு உந்துதலாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.