4. மேலும், அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போரின் குடியிருப்பு கால வரம்பை ஐந்தாண்டு காலமாக உள்ளதை மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை (நிலை) எண்.43, வருவாய்த் துறை, நாள்: 29.01.2010. அரசாணையில் அரசு ஆணையிட்டது. இச்சூழ்நிலையில், சிவகாசி பகுதி வரிச் செலுத்துவோர் சங்கம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நீதிப்பேராணை எண்.18485/10-இல், அரசாணை (நிலை) எண்.43, வருவாய்த் துறை, நாள்: 29.01.2010. அரசாணையில் குடியிருப்பு கால வரம்பை ஐந்தாண்டு காலத்திலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து வெளியிட்ட அரசாணையை இந்த வழக்கு விசாரணை முடியும் வரை செயல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை ரத்து செய்வதற்கு தனியாக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அரசின் இலவச வீட்டுமனை வழங்கும் ஒரு முறை சிறப்புத் திட்டத்தின் கீழ் விடுபட்டுள்ள ஏழை எளிய மக்கள் பயன் அடையும் பொருட்டு அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி குடியிருந்து வருபவர்களின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் இந்த ஒரு முறை சிறப்புத் திட்டம் 1.10.2010 முதல் ஓர் ஆண்டு காலத்திற்கு அதாவது 30.9.2011 வரை நீட்டிப்பு செய்து அரசாணை (நிலை) எண்.482, வருவாய்த் துறை, நாள்: 28.09.2010. அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒரு முறை சிறப்புத் திட்டம் 1.10.2011 முதல் ஓர் ஆண்டு காலத்திற்கு அதாவது 30.9.2012 வரை நீட்டிப்பு செய்து அரசாணை (நிலை) எண்.172, வருவாய்த் துறை, நாள்: 23.05.2012. அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.