இப்படித்தான் 19980 ல் டாக்ஸி ஓட்டியதில் கிடைத்த பணத்தை வைத்து சொந்தமாகக் கொஞ்சம் நிலம் வாங்கினேன். அந்த நிலத்தில் என் நெடுநாள் கனவான பள்ளி ஆரம்பிக்கும் முயற்சியை செயல்படுத்தினேன். அந்தப் பள்ளிக்கான முழுச் செலவும் நான் டாக்ஸி ஓட்டுவதால் கிடைக்கும் தொகை, சில நல்ல உள்ளங்கள் தரும் டொனேஷன்கள், மூலமாக மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. ஏழைக் குழந்தைகளின் நலனுக்கான எனது பள்ளிகளுக்கு அரசு உதவி பெறத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன், ஆனால் அது இன்னும் கிடைத்தபாடில்லை. அதற்காக நான் ஆசைப்பட்டு தொடங்கிய பள்ளியின் இயக்கம் நின்று போய் விடுமா என்ன?