சொந்தக் கார், தனியார் கேப் சர்வீஸ்கள், ஆட்டோக்களில் பேருந்துக்குள் நுழைபவர்கள் திரும்பிச் செல்வதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க எண்ணி பஸ் ஸ்டாண்டு நுழைவாயிலிலேயே பயணிகள் இறங்கிக் கொண்டு தங்கள் லக்கேஜ்களை சுமந்தவாறு நடந்து பேருந்தைத் தேடிச் செல்ல வேண்டியதாகி விடுகிறது. குழந்தைகள் மற்றும் வயதானவர்களோடு பயணிப்பவர்களின் நிலை மிகவும் கஷ்டமானது. அவர்களால் நுழைவாயில் தொடங்கி தங்களது லக்கேஜைத் தாங்களே சுமந்து வருவது என்பது முடியாத காரியம். அவர்களுக்கு துணைக்கு வருவோருக்கும் கூட காரை பார்க் செய்ய வசதி இல்லாத காரணத்தால் பஸ் ஸ்டாண்டுக்குள் பெரிய திண்டாட்டமாகி விடுகிறது.