ஏனெனில் கருக்கலைப்பு தடை சட்டத்தின் உட்பிரிவுகளைப் பயன்படுத்தி சிலர் முறைகேடான கருக்கலைப்பு செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு. இது குறித்த விசாரணையின் போது அரசு சார்பாக வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியதாவது; ’இருபது வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க அனுமதிக்க முடியாதென, கருக்கலைப்பு தடுப்பு சட்டத்தின் மூன்றாவது பிரிவு கூறுகிறது. அதே நேரத்தில், சட்டத்தின் ஐந்தாவது பிரிவு, தாயின் உயிருக்கு ஆபத்து என்ற சூழ்நிலையில் அனுமதி அளிக்கலாம் என்று கூறுகிறது.இந்த சட்டத்தின்படி, இரண்டு உயிர்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஐந்தாவது சட்டப் பிரிவை பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும் கருவை கலைக்கும் அபாயம் உள்ளது. இதனால், பெண் சிசு கலைப்பு அதிகரித்துவிடும். அதனால், இந்த சட்டப் பிரிவுகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்.’என்று கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை குறித்து அதற்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள அமர்வில் விவாதிக்கலாம் என வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.