நாடு முழுதும் ரூபாய் நோட்டு பிரச்சினையால் மக்கள் அவதிப் பட்டு வரும் சூழலில், குஜராத்தில் நடைபெற்ற ஒரு வினோத நிகழ்வு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் நவசாரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர்கள் கலந்து கொண்டு தங்களது பாடல்கள் மூலம் ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தனர். அப்போது ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் தங்களது மனம் கவர்ந்த நாட்டுப்புற பாடகிகளை மேலும் உற்சாகப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் மீது 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை மழை போல வர்ஷிக்க ஆரம்பித்தார்கள்.