தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜெ மரணத்திற்காக நீதி கேட்க நான் இருக்கிறேன்- தோழி கீதாவின் பேட்டி!

தமிழக மக்களுக்கு அதிக அறிமுகமற்றவராக இருந்த போதும் அதிரடிக் கேள்விகளுடன் ஜெ மரணத்தை முன்னிறுத்தி கேள்விகள் எழுப்பி இருக்கும் இந்த கீதா யார்?

News image
Updated On :27 டிசம்பர் 2016, 9:06 am

மறைந்த முதல்வர் ஜெ வின் குடும்ப நண்பரும், சிறு வயது தோழியுமான கீதா; ஜெ மரணத்தை ஒட்டி சில சர்ச்சைக்குரிய கேள்விகளை முன் வைத்து அதற்கு விடை காணும் பொருட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஜனவரி 11-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜெ மரணத்திற்கு நீதி கேட்டு முன்னரே நடிகை கெளதமி, அட்வகேட் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் தமிழக மக்களுக்கு அதிக அறிமுகமற்றவராக இருந்த போதும் அதிரடிக் கேள்விகளுடன் ஜெ மரணத்தை முன்னிறுத்தி கேள்விகள் எழுப்பி இருக்கும் இந்த கீதா யார்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் வலுப்பட்டிருக்கிறது. 

61 வயதாகும் கீதா; இந்தியாவின் முதல் அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த மொட்டூரி சத்யநாராயணாவின் பேத்தி. இவரது தாயார் சரோஜினி தெலுங்குப் பட உலகில் பெண் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினராக இருந்தவர். திரையுலகில் இருந்ததனால் கீதா குடும்பத்தினருக்கு சந்தியா மற்றும் அவரது சகோதரிகள் அனைவருடனும் நல்ல நட்பு இருந்திருக்கிறது. மேலும் கீதாவின் சகோதரரும், மறைந்த முதல்வர் ஜெ வின் சகோதரர் ஜெயக்குமாரும் உடன் பயின்றவர்கள். இந்த நட்பினால் மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் கீதா, ஜெ வுடன் அவ்வப்போது தொடர்பில் இருந்திருக்கிறார் என அவரது பேட்டி கூறுகிறது.

தனியார் புலனாய்வு வார இதழின் இணையப் பக்கத்தில் வெளியான கீதா பேட்டி;

ஜெ மரணத்திற்காக தாம் நீதி கேட்பது அரசியல் ரீதியாக அல்ல; ஜெ தமக்கு முதல் முறை அறிமுகமாகும் போது; அவர் புகழ் பெற்ற நடிகையும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. நாங்கள் இருவரும் நடிகை சாவித்திரிக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருந்த மைதானத்தில் ஒன்றாக டென்னிஸ் ஆடுவோம். அப்போதிருந்தே ஜெ எனக்கு நல்ல தோழி. ஜெ யாருமற்றவர் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். அவருக்காக நீதி கேட்க தோழியான நான் இருக்கிறேன். தீபாவும், தீபக்கும் வேண்டுமானால் மிரட்டப் படலாம். ஆனால் என்னை யாரும் மிரட்ட முடியாது. எனக்கு அரசியல் ரீதியாக வலிமையான பின்புலம் இருக்கிறது என்கிறார் கீதா.

video courtsy: நக்கீரன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.