இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கலைக் கூடத்தில் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெற்றன. அப்போது கட்டடத்தில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பழமை வாய்ந்த இந்த கலைக் கூடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, கலைக் கூடத்தின் சுவர்களில் லேசாக விரிசல் ஏற்படத் தொடங்கி 2001-ல் பல இடங்களிலும் விரிசல் ஏற்பட்டது. எனவே, கலைக் கூடத்திற்குள் பார்வையாளர்களை அனுமதித்தால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக் கூடாது என்பதால் 2002-ல் கலைக் கூடம் மூடப்பட்டது. அங்கிருந்த ஓவியங்களும், கலைப் பொருள்களும் அருகில் உள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.