டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மிதவைக் கூடுகளில் மீன் குஞ்சு வளர்க்கும் தொழில்நுட்பம்

தருமபுரி: மிதவைக் கூடுகளில் மீன் குஞ்சு வளர்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மீன்வளத் துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. செயற்கை இழைகளால் ஆன வெலான் ஸ்கிரீன் வலையை நாடாக்கள் வைத்து இணைத்து தைத்து தயார

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:27 pm

ஜெபலின்ஜான்

தருமபுரி: மிதவைக் கூடுகளில் மீன் குஞ்சு வளர்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மீன்வளத் துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

செயற்கை இழைகளால் ஆன வெலான் ஸ்கிரீன் வலையை நாடாக்கள் வைத்து இணைத்து தைத்து தயாரிக்கப்பட்ட செவ்வக வடிவான பை போன்ற அமைப்புதான் மிதவைக்கூடு. மிதவைக் கூட்டின் 6 பக்கங்களும் மூடப்பட்டு மேல்பக்கத்தின் ஒரு மூலையில் மட்டும் திறந்துவிடுவதற்கேற்ப ஜிப் இருக்கும்.

மிதவைக் கூடுகள் அமைக்கப்பட இருக்கும் நீர்நிலைகளில் குறைந்தது 4 முதல் 5 அடி ஆழத்துக்கு நீர்மட்டம் இருக்க வேண்டும். சுமார் 6 அடி நீளம் கொண்ட தேவையான சவுக்கு கம்புகளை (ஒரு கூண்டுக்கு 12 கம்புகள்) தரையில் 1 அடி ஆழத்துக்கு நட்டு மிதவைக் கூடுகளை சவுக்குக் கம்புகளுடன் இணைத்து கட்ட வேண்டும்.

மிதவைக் கூட்டின் அடிபகுதி தரைமட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 1 அடிக்கு மேலாகவும், மேல் பகுதி தண்ணீர் மட்டத்துக்கு மேல் 1 அடி இருக்கும் வகையிலும் அமைக்க வேண்டும்.

ஆழம் அதிகமாக உள்ள நீர்நிலைகளில் மிதவைக் கூடுகளுடன் மூங்கில் கம்புகள், காற்றுப் புகாமல் மூடப்பட்ட காலி டின்கள், பிளாஸ்டிக் கேன்கள் அல்லது மிதவைகளை இணைத்துக்கட்டி மிதவைக் கூடுகளை மிதக்கவிட்டும் மீன் குஞ்சுகளை வளர்க்கலாம்.

மீன்குஞ்சுகள் வளர்க்கும் முறை: கட்லா, ரோகு மற்றும் மிர்கால் நுண்மீன்குஞ்சுகள் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும், சாதா கெண்டை நுண்மீன்குஞ்சுகள் செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலும் கிடைக்கும். தேவைப்படும் நுண்மீன்குஞ்சுகளை மேட்டூர் அணை மீன்பண்ணை அல்லது தனியார் பண்ணைகளில் வாங்கலாம்.

ஒரு மிதவைக் கூட்டில் ஒரே வகையான நுண்மீன்குஞ்சுகளையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மீன் இன குஞ்சுகளையோ சேர்த்து இருப்பு செய்து வளர்க்கலாம்.

ஒரு மிதவைக் கூட்டில் 1 லட்சம் நுண்மீன்குஞ்சுகளை வளர்க்கலாம். 2 வார காலத்துக்குப்பின், இவை சிறுமீன்குஞ்சுகளாக வளர்ந்துவிடும். இதில் 60 ஆயிரம் சிறுமீன்குஞ்சுகள் மட்டுமே பிழைக்கும்.

அதைத்தொடர்ந்து ஒரு மாதத்தில் இவை சிறுமீன்குஞ்சு பருவத்தில் இருந்து விரலி பருவத்துக்கு வளர்ந்துவிடும். இதில் 20 ஆயிரம் விரலிகள் மட்டும்தான் பிழைக்கும்.

மீன்குஞ்சுகளுக்கான தீவனம்: நீர் ஆதாரங்களில் மீன்குஞ்சுகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் இயற்கை உணவுகள் ஓரளவுக்கு கிடைக்கும். இருப்பினும் மீன்குஞ்சுகள் கூடுதல் வளர்ச்சிப்பெற கூடுதல் தீவனம் வழங்க வேண்டும். உமி நீக்கப்பட்ட பச்சரிசி தவிட்டுடன் அரைத்து சலிக்கப்பட்ட கடலை புண்ணாக்குத் தூளை 1:1 என்ற விகிதத்தில் கலந்து தீவனமாக வழங்க வேண்டும். கூடுதல் தீவனத்தை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தவணைகளாக பிரித்து வழங்க வேண்டும்.

மீன் வளர்ப்புக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஏரிகள், கண்மாய்களில் இருப்பு செய்யப்பட வேண்டிய மீன் விரலிகள் தேவைக்கேற்ப மிதவைக் கூடுகளின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும்.

இது குறித்து மீன்வளத் துறையின் தருமபுரி மாவட்ட உதவி இயக்குநர் என்.மதனகோபால் கூறியது:

மீன்வளத்துறை மூலம் நீர்வள, நிலவளத் திட்டத்தின்கீழ் இப்புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு மிதவை கூட்டத்தில் மீன் வளர்க்க ரூ.65,000 வரை முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.35,000 லாபம் கிடைக்கும். உரிமையாளர்களே பராமரித்தால் ரூ.50,000 வரை லாபம் கிடைக்கும். இந்த கூட்டை 3 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். எனவே, 2-வது, 3-வது ஆண்டுகளில் பராமரிப்பு செலவு குறையும்.

மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களாக இருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் மானியம் பெறலாம். மற்றவர்கள் இத்தொழில்நுட்பத்தை அறிந்து தாங்களாக மீன்பண்ணை வைக்கலாம். மீன்வளர்ப்பு தொழில்நுட்பப் பயிற்சி மீன்வளத்துறை மூலம் அளிக்கப்படும். கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர் மீன்துறை உதவி இயக்குநர் (உள்நாட்டு மீன்வளம்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், இலக்கியம்பட்டி, தருமபுரி, தொலைபேசி எண்:04342-233923 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.