கம்ப்யூட்டருக்குரிய ஹார்டுவேர்களை நுகர்வோர்கள் ஒரிஜினலாகவும், தரமானதாகவும் வாங்குவதற்கு காட்டும் ஆர்வத்தைப்போல, மென்பொருள்களையும் ஒரிஜினலாக வாங்குவதற்கு ஆர்வம் காட்டினால் மட்டுமே திருட்டு மென்பொருளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார். திருட்டு மென்பொருளை நிறுவுவதால் ஏற்படும் பிரச்னை குறித்து மக்கள் உணர வேண்டும், திருட்டு மென்பொருளை நிறுவுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மென்பொருள் துறையினர் கோரிக்கை வைக்கின்றனர். இப் பிரச்னை முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை எனில், அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதோடு மட்டுமன்றி, எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கும் இது ஒரு தடைக்கல்லாக இருக்கும்.