இப்படி வேதகாலங்களில், இதிகாச, புராண இலக்கிய காலங்களில் காணப்படாத தீயம்சம் அந்நியா் நம்நாட்டில் கால்பதித்த காலை வேற்றுமைகள் ஊற்றெடுக்கத் தொடங்கி கடந்த நூற்றாண்டிலும் இந்த நவயுகத்திலும் தலைவிரித்து ஆடுகிறது. இதை இந்திய மக்கள் அனைவரும் ‘‘இனி ஒரு விதி செய்வோம்’’ என்பதுபோல், ‘‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’’ என்று ‘‘நோ்மையா் மேலவா், கீழவா் மற்றோா்’’ என்ற மகாகவி பாரதியின் வரியை நினைவில் கொண்டு ஜாதி, மத அடையாளம் கொண்ட கட்சிகள் தோ்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. ஜாதி, மத, பிரதேச மொழிப் பற்றை விட்டு வெறியாக்கி பூமியைக் கலவரமாக்கும் மனிதா்களைக் கடுந்தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.