அறப்போராட்டத்தின் வெற்றி
மணிப்பூர் தலைநகர் இம்பாலின் புறநகர்ப் பகுதியான மாலோம் பஜாரில், 28 வயது இளம்பெண் இரோம் ஷர்மிளா 2000-ஆவது ஆண்டு நவம்பர் மாதம் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது, யாரும் அறிந்திருக்க முடியாது, அதுதான் உலகின் நீண்டகால உண்ணாவிரதப் போராட்டமாக இருக்கப்போகிறது என்று.










