அந்த மனுவில், "தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கடந்த செப்டம்பர் 30 வரை வழங்க வேண்டிய 45.327 டி.எம்.சி. நீரை பிலிகுண்டு நீர் அளவையிலிருந்து உடனே திறந்து விட வேண்டும்; அக்டோபர் 1-க்குப் பிறகு தர வேண்டிய உரிய நீர்ப் பங்கீட்டு அளவையும், முறையாகத் தமிழகத்துக்குத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்; அதிக நீர்ப்பரப்பில் பயிர் சாகுபடி செய்வதைத் தடுக்கவும், உரிய நீரைத் தமிழகத்துக்குத் திறந்து விடுவதை உறுதி செய்யவும், காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்' எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.