பருவநிலை மாற்றமும், வளர்ந்த நாடுகளும்
அனைத்து மாநில சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர்கள் மாநாடு புது தில்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாசு அளவைக் கண்காணிக்க தில்லி, சென்னை, ஆக்ரா, கான்பூர், லக்னெü, வாராணசி, ஃபரீதாபாத், ஆமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 நகரங்களில் தேசிய காற்றுத் தரக் குறியீட்டு எண் அளிக்கும் முறையைத் தொடக்கி வைத்தார்.









