வாசிப்பை நேசிப்போம்!
ஏப்ரல் 23-ஆம் நாள் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்தக் கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ஆம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுவது என்று 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 28-ஆவது மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.










