அணை நிரம்பியது; பொய்மை தோற்றது!
பெரியாறு அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மிகப் பழைமையான இந்த அணை எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். அவ்வாறு நேர்ந்தால் கேரளத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் பல இலட்சம் மக்கள் உயிரிழப்பார்கள்' என 1963-ஆம் ஆண்டில் மலையாள வாரஇதழ் ஒன்று முற்றிலும் பொய்யான செய்தியைப் பரப்பியது.










