முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற அண்ணாதுரை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று ஓராண்டு காலம் அவர் நடத்திய ஆட்சியின் சாதனையாக சென்னை மாநிலம் என்கிற பெயரை மாற்றி அதற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியதையும், உலகத்தமிழ் மாநாடு நடத்தியதையும், தலைநகரம் முழுக்க தமிழ் அறிஞர்கள் பலருக்கு சிலை வைத்ததையும், இன்று வரை மாபெரும் சாதனையாக பறைசாற்றி வருகின்றனர். தொடர்ந்து திராவிட இயக்கங்களின் ஆட்சிக்காலத்தில் பெயர் சூட்டுவதையும், சிலை வைப்பதையும், மணி மண்டபங்கள் அமைப்பதையும், அடுக்குமொழி வசனங்கள் பேசுவதையும் தமிழ் வளர்ச்சிக்குத் தாங்கள் செய்த சேவையாக முழங்கி வருகிறார்கள்.