பாதை மாறிய பயணம்
நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள், பாரத தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்' என்றார் வீரத்துறவி விவேகானந்தர்; "ஒளி படைத்த கண்ணினாய் வா வா' என்றழைத்தார் தேசியக்கவி பாரதியார்; "வருங்காலத்தில் அதிக இளைஞர்களைக் கொண்ட தேசமாக இந்தியா இருக்கப் போகிறது, அதனால் உலக அரங்கில் ஆற்றல், அறிவுத்திறன், உழைப்பு என எல்லா வகையிலும் வலிமையுடையதாக இந்தியா திகழப் போகிறது' என்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.









