சீர்கேடடையும் மத்திய - மாநில நிதி உறவு
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள நிதிக்குழு ஆணையத்தைப் புறக்கணித்துவிட்டு, மத்திய நிதி அமைச்சர் தன்னிச்சையாக அமைத்த இரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு அளிக்க மத்திய அரசு முனைந்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.










