ஒத்த கருத்துகளையும், செயல்பாடுகளையும் உள்ள நண்பர்களை அறிந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து மகிழ்ந்திருக்கும் இடமென்றும், சமூகப் பிணைப்புகளை ஏற்படுத்த வழி செய்கிற இணைய வழி சேவை என்றும் பேஸ்புக், ஆர்குட், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அறியப்படுகின்றன. எனினும், வேண்டியவர்களையும், வேண்டப்படாதவர்களையும் கண்காணிக்க முடியும் என்பதும், மற்றவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளையும், விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற மனிதர்களின் அடிப்படை குணமும்தான் "ஃபேஸ்-புக்' போன்ற சமூக வலைத்தளங்களுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்புக்கு முக்கியக் காரணம்.