உண்மை ஒருநாள் வெல்லும்
இலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது நாடெங்கும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் தலைநகர் தில்லி, முக்கிய நகரமான மும்பை மற்றும் கடல் கடந்த நாடுகளிலும் தமிழ் மக்களின் எழுச்சி, பல்வேறு போராட்ட வடிவங்களைப் பெற்றுள்ளது.








