வேண்டும் - வீட்டுக்கொரு நூலகம்
மக்களை மாக்களிடமிருந்து பிரித்துக் காட்டுவது எது? சிந்தனை செய்யும் அறிவு; நல்லது, தீயது என்று பிரித்தறியும் பகுத்தறிவு; இதற்குத் தூண்டுகோலாய் இருப்பவை நூல்கள். அன்று முதல் இன்றுவரை இதற்கு மனிதகுலம் தலைவணங்குகிறது. முடியரசாயினும், குடியரசாயினும் ஆளுவோர் இவற்றைக் கண்டு அஞ்சுகின்றனர்.








