இத்தகைய ஒரு நிகழ்ச்சியில் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகள், தனி நபர் மாச்சரியங்கள் இவற்றைக் கடந்து, ஈழத்தமிழர் நலன் என்கிற அடிப்படையில் அனைவரும் ஒருங்கிணைந்து நின்றிருக்க வேண்டும். அதிமுக, மதிமுக தொடங்கி எல்லா அமைப்புகளும் இதில் கலந்துகொண்டிருந்தால், திமுக ஓரங்கட்டப்பட்டிருக்கும் என்பது மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் சம்பவத்தின்போது, திமுக எடுத்த நிலைப்பாடு விமர்சிக்கவும், கண்டிக்கவும் பட்டிருக்கும். ஒரு நல்ல வாய்ப்பை இதர கட்சிகள் இழந்துவிட்டது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் மத்தியில் தான் இழந்துவிட்ட நம்பிக்கையைத் திமுக மீண்டும் பெற அது உறுதுணையாகிவிட்டது.