நேற்று வெள்ளியன்று வெளியானது UPSC தேர்வு முடிவுகள். அதில் அனைத்து மாநிலங்களுக்கிடையிலான தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பெற்றவராக கனிஷ்கா கட்டாரியா எனும் இளைஞர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கனிஷ்கா, தான் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றதற்கும், தேர்வுகளுக்கு நன்றாகப் படித்து தயார் செய்வதற்கும் தனது கேர்ள் ஃப்ரெண்டு மிகவும் உதவியாக இருந்தார் என்று குறிப்பிட்டு மிகுந்த நெகிழ்ச்சியுடன் அவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்திருந்தார். காதலிக்கு மட்டுமல்ல தான் தேர்வில் வெற்றி பெற தனது பெற்றோர் மற்றும் சகோதரியும் கூட மிகுந்த புரிந்துணர்வுடன் உதவியாக இருந்தார்கள் என்று கூறும் கனிஷ்கா யு பி எஸ் சி தேர்வில் முதன்மைப் பாடமாக எடுத்துக் கொண்டது கணிதத்தை. எஸ் சி பிரிவைச் சேர்ந்த கனிஷ்கா மும்பை ஐஐடி யின் பி டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் & இஞ்சினியரிங் துறை மாணவர்.