குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியரிடையே முகேஷ் கன்னாவுக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு மத்திய அரசு தனது ‘சக்திமான்’ திட்டத்துக்கு வலுச்சேர்க்க முகேஷைப் பயன்படுத்திக் கொண்டது. இந்திய அரசின் சக்திமான் திட்டத்தின் நோக்கம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இந்தியக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்தின்மை, சத்துக்குறைபாடு, பேறு காலத்தின் போதான தாய், சேய் மரண விகிதத்தைக் குறைத்தல், ஆரோக்யம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் எனும் அடிப்படைகளைக் கொண்டது. முகேஷ் கன்னா, தனது சக்திமான் தொடரின் இறுதியில் ஒவ்வொரு வாரமும் மத்திய அரசின் சக்திமான் திட்டத்திற்கான அம்பாஸிடராகவும் செயல்பட்டு குழந்தைகளின் ஆரோக்ய வாழ்வுக்கான அறிவுரைகளையும் வழங்கி வந்தார்.