கருப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக கருப்பு மாறியுள்ளது. இதுவரை ரூ. 230 கோடி வரை வசூலித்த இப்படம் இந்த வார இறுதிக்குள் கூடுதல் வசூலைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியாகி 10-வது நாளிலும் 900 திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முதல் நாளைவிட அதிகம்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்ஜே பாலாஜி, “3 ஆண்டுகளுக்கு முன் சூர்யா சாரிடமிருந்து அழைப்பு வந்தபோது வேறு வேலையாக இருந்தேன். பின், சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர் அழைத்தார். இது மறைமுக செய்தி என எடுத்துக்கொண்டு கருப்பு கதையை அவரிடம் சொன்னேன்.
எனக்கு கடவுள் மீது ஆணித்தரமான நம்பிக்கை உண்டு. கருப்பு திரைப்படம் மக்களுக்குப் பிடிக்கும் கொண்டாடுவார்கள் என நம்பினேன். அதேபோல் நடந்துவிட்டது. இப்படத்திற்கான இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது. எழுதும்போதுதான் அது எப்படி வரும் எனத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.
Director RJ Balaji has announced that a sequel to the film Karuppu will be produced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








