தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை குறித்து குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.
பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் இயங்கி வந்த தயாரிப்பாளர் கே. ராஜன் நேற்று (மே 17) சென்னை அடையாறு கூவத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக சில தகவல்கள் வெளியாகின. குடும்ப பிரச்னை காரணம் என்றும் கூறப்பட்டன.
இந்த நிலையில், கே. ராஜனின் மகன்கள், மகள் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனக் கோரிக்கை வைத்ததுடன், “எங்கள் அப்பா கே. ராஜன் ஏழ்மையிலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்தவர். தன் கனவுகளை நனவாக்கியவர். அவர் குறித்து உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? தெரியாமல் தவறான கருத்துகளைப் பரப்பாதீர்கள்.
எங்கள் அப்பா சில தயாரிப்பாளர்களுக்குக் கடன் கொடுத்திருந்தார். அது எதுவும் திரும்பி வராததால் கடும் மன உளைச்சலில் இருந்தார். தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களின் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
Producer K. Rajan's family has issued a clarification regarding his suicide.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











