மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல் நாளே ரூ. 200 கோடி வசூலிக்கும் துரந்தர் - 2?

துரந்தர் - 2 குறித்து...

News image
Updated On :19 மார்ச் 2026, 2:46 pm

துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் முதல் நாளே மிகப்பெரிய வசூலைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்லும் ரன்வீர் சிங், அங்கிருந்து இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் ஊடுருவுவது, ஆயுதங்கள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது போன்ற தகவல்களை சேகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இரண்டாம் பாகத்தில் ரன்வீர் சிங் யார்? எதனால் பாகிஸ்தான் சென்றார்? உளவாளியான அவர் பிடிபட்டாரா? இல்லையா? என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படமாக துரந்தர் ரிவென்ஞ் அமைந்துள்ளது.

முதல் பாகம் அளவிற்கு இல்லையென்றாலும் இப்படமும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முதல் நாளான இன்றே இப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

dhurandhar the revenge might collect rs. 200 crores in first day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.