விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மகளே என் மருமகளே தொடர் 162 நாள்களுடன் நிறைவடைந்தது.
தங்கமகள், காற்றுக்கென்ன வேலி தொடரை இயக்கிய ஹரிஸ் ஆதித்யா இந்தத் தொடரை இயக்கி வந்த நிலையில், குறுகிய காலத்தில் 6 மாதங்களில் நிறைவடைந்தது.
மகளே என் மருமகளே தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடித்து வந்தனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடித்திருந்தார்.
மருமகள் - மாமியார் இருவருக்கு இடையே நிகழும் அன்பு பரிமாற்றங்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வந்தது.
வர்ஷினி சுரேஷ் மற்றும் அவினாஷ் இருவரையும் ரேஷ்மா பசுபுலேட்டி சேர்த்து வைப்பதுபோல காட்சிகள் படமாக்கப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மகளே என் மருமகளே தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The series Makale En Marumakaleh, which was aired on Vijay TV, ended after 162 days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

500 நாள்களை நிறைவு செய்த மதிய நேர சீரியல்!

மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

குறுகிய காலத்தில் நிறைவடையும் மகளே என் மருமகளே தொடர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



