நடிகர் பிரபு தேவா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது சுயாதீன திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படம் மதுரையில் படமாக்கப்பட்டது. இதனை, சர்வதேச திரைவிழாக்களுக்கு அனுப்பி திரையரங்குகளில் வெளியிட கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளார். இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் நடிகர் அதர்வாவை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்குகிறார். இதில், நடிகர் உப்பேந்திரா வில்லனாக நடிப்பதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகர் பிரவு தேவா நடிகர் அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பிரபு தேவாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் மெர்குரி என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
It is reported that actor Prabhu Deva has joined a film directed by Karthik Subbaraj.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











