நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காதலரைப் பிரிந்த நடிகை சுனைனா?

நடிகை சுனைனா காதலரைப் பிரிந்ததாகக் கூறப்படுகிறது...

News image

நடிகை சுனைனா , யூடியூபர் காலித் அல் அமெரி

Updated On :16 ஜூன் 2026, 3:17 pm IST

நடிகை சுனைனா திருமணம் செய்துகொள்ள இருந்த தன் காதலரைப் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான சுனைனா (35), மாசிலாமணி, திருத்தணி, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமானார். இறுதியாக், இவரின் நடிப்பில் ரெஜினா திரைப்படம் வெளியானது.

இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாத நிலையில், அடுத்த படம் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை குறிக்கும் வகையில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

Story image

தகவலின்படி, துபையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி (40) என்பவரைத் திருமணம் செய்ய இருந்தார். அவரும் சுனைனா பதிவிட்டதைப் போன்று இரு கைகளில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தை மட்டும் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை சுனைனாவும் யூடியூபர் காலித் அல் அமெரியும் அவரவர் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால், இருவருக்கும் பிரிவு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அல் அமெரி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

It is reported that actress Sunaina has parted ways with the boyfriend she was set to marry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.