17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆபாசம், அருவருப்பு... பெத்தி படக்குழுவை விமர்சிக்கும் ஜான்வி கபூர் ரசிகர்கள்!

பெத்தி திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் குறித்து...

News image

பெத்தி படத்தில் ஜான்வி கபூர், ராம் சரண். - படம்: யூடியூப் / டி சீரிஸ் தமிழ்.

Updated On :5 ஜூன் 2026, 3:41 pm IST

பெத்தி திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் குறித்து இணையவாசிகளும் அவரது ரசிகர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி திரைப்படம் நேற்று (ஜூன்4) உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளிலே ரூ.135.36 கோடி வசூலித்துள்ளது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூரரைக் காட்சிப்படுத்தியுள்ள விதங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. இந்தப் படத்தின் டிரைலர் வெளியானபோதே இது குறித்த பேச்சு எழுந்தது.

இந்த நிலையில், அதிக சம்பளம் கொடுத்து நடிகைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அவமானம் என்ற ஒரு பதிவுக்கு ஜான்வி கபூர் லைக் இட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆச்சியம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்வி கபூரை மோசமான காமிரா கோணத்திலும் ஆபாசமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

நாயகன் ராம் சரணே நடிகையிடம் அத்துமீறி நடித்துள்ளதாகவும் விமர்சனங்கள் கடுமையாகியுள்ளன. ராம் சரண் படத்தில் சமூக அரசியல் போராட்டம் நடத்துவதும் நடிகைக்கு உடலின் நடுப்பகுதிக்கு க்ளோசப் வைத்திருப்பதும் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Ram Charan's Peddi Slammed As 'Most Expensive Disrespect To Women'; Janhvi Seemingly Agrees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.