ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹார்ட் பீட் - 3 வெளியானது!

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ஹார்ட் பீட் மூன்றாவது சீசன் பற்றி...

Heart Beat 3

ஹார்ட் பீட் - 3 - JioHotstar

Published On :30 ஜூலை 2026, 10:11 am IST

ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் ஹார்ட் பீட் மூன்றாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஹார்ட் பீட் மூன்றாம் பாகம் வெளியாகியுள்ளது. வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் நான்கு எபிசோடுகள் வெளியாகும்.

முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, மோகன் ராம், சாருகேஷ், ராம், அமித் பார்கவ், அஸ்வதி, சபரிஷ் உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

முந்தைய சீசன்களில் நவீன் பாத்திரத்தில் நடித்த ஆர்ஜி ராம், அனிதா பாத்திரத்தில் நடித்த பாடினி குமார், தேஜு பாத்திரத்தில் நடித்த யோகலட்சுமி, குணா பாத்திரத்தில் நடித்து வந்த சர்வா உள்ளிட்டோர் இந்த சீசனில் தொடரவில்லை என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள மூன்றாவது சீசனில் புதிய கதைக்களத்தில் புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Summary

Heart Beat - 3 Released in Jio Hotstar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.