ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜனநாயகன் படத்தில் முதல்வராக வருவாரா விஜய்? கிளிம்ஸ் காட்சிகள் வெளியீடு!

ஜனநாயகன் கிளிம்ஸ் விடியோவில், கோட் சூட் அணிந்த முதல்வர் சி. ஜோசப் விஜய் தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது குறித்து...

Jananayagan Glimpse visuals released

ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் விடியோவிலிருந்து... - எக்ஸ்

Published On :20 ஜூலை 2026, 6:15 pm IST

ஜனநாயகன் திரைப்படத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தோன்றுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஜனநாயகன் கிளிம்ஸ் காட்சிகளில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கோட் சூட் அணிந்தவாறு தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளப் பக்கங்களில் முதல்வர் விஜய் பகிர்ந்துள்ளார்.

அந்த கிளிம்ஸ் விடியோவில் தளபதி வெற்றி கொண்டான் பாத்திரமும் முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கோட் சூட் அணிந்தவாறு நின்றுக்கொண்டிருக்கும் காட்சியும் மாறி மாறி இடம்பெற்றுள்ளது.

ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் விடியோவிலிருந்து...

ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் விடியோவிலிருந்து... - எக்ஸ்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற ஜூலை 23 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3000 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியாகிறது. முன்பதிவில் மட்டும் இதுவரை (ஜூலை 20, மாலை 6 மணி) ரூ. 10 கோடி வசூலித்துள்ளது.

Summary

Will Chief Minister Vijay appear in the movie Jananayagan? Glimpse visuals released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.