ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள்

விஜய்சேதுபதியின் மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு...

Two National Awards announced for the movie Maharaja.

மகாராஜா போஸ்டர்

Published On :18 ஜூலை 2026, 7:06 pm IST

விஜய்சேதுபதியின் மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

72ஆவது தேசிய விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், விஜய்சேதுபதியின் மகாராஜா திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசும் இவ்விருதினை வென்றுள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு குப்பைத்தொட்டியை கருப்பொருளாக கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.

சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்து இருந்தனர். படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். படத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த இப்படம், ஓடிடியிலும் வெளியாகி பெரும்பாலோனோரின் விருப்பத் திரைப்படமாக அமைந்திருந்தது. மேலும் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மகாராஜா திரைப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Vijay Sethupathi's Maharaja movie has received 2 National Awards.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.